14910 திரு அஞ்சலி மலர்.

இலங்கையர் கனகசபை (ஆசிரியர்), த.கிருபாகரன் (இணை ஆசிரியர்). பிரான்ஸ்: சபரீசன் ஒன்றியம், 1வது பதிப்பு, 2001. (பாரிஸ்: மெய்கண்டான் அச்சகம்). 84 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. வட இலங்கை சர்வோதய அறங்காவலரும், தமிழ்கூறும் நல்லுலகினால் நன்கு அறியப்பட்டவரும், வாழ்நாள் முழுவதும் சமூக மேம்பாட்டுக்காக அல்லும் பகலும் உழைத்தவருமான அமரர் தொண்டர் கந்தையா திருநாவுக்கரசு. அவர்களின் மறைவு குறித்து வெளியிடப்பட்ட நினைவஞ்சலி மலர். சமூகத்தின் உயர்வே தனது லட்சியம் என சொல்லாலும் செயலாலும் வாழ்ந்து காட்டி, நிகழ்காலத்தவர் மட்டுமல்லாது எதிர்கால சந்ததியினரும் கடைப்பிடிக்கக்கூடிய வகையில் வாழ்ந்த பெருமகன் தான் தொண்டர் கந்தையா திருநாவுக்கரசு. அன்னாரைப் பற்றிய மனப்பதிவுகளை பாரிஸ் வாழ் பிரமுகர்கள் அஞ்சலிகளாக இந்நூலில் பதிவு செய்திருக்கின்றனர்.

ஏனைய பதிவுகள்

13246 பன்னிரண்டாம் திருமுறை: பெரியபுராணம் எனப் பெறும் திருத்தொண்டர் புராணம் மூலமும் தெளிவுரையும்-தொகுதி 3.

வ.த.இராமசுப்பிரமணியம் (உரையாசிரியர்). தெல்லிப்பழை: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஜுலை 2017. (கொழும்பு: கு.அருளானந்தம், அனுஷ் அச்சகம்). vi, 948 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ. முன்னைய இரு

15532 கோயில் மாடும் ஹோட்டல் பூனையும்.

ஏ.மஜீத். கல்முனை: மருதூர் வெளியீட்டுப் பணிமனை, 436, பழைய சந்தை வீதி, சாய்ந்தமருதூர்-03, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (கொழும்பு 10: U.D.H. Compuprint, இல. 51/42, மொஹிதீன் மஸ்ஜித் வீதி). 120 பக்கம்,