14985 யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 3.

வேதநாயகம் தபேந்திரன். யாழ்ப்பாணம்: சிவகாமி பதிப்பகம், தேன் தமிழ், கைதடி வடக்கு, கைதடி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (யாழ்ப்பாணம்: தேவி பிரின்டர்ஸ், 140/1, மானிப்பாய் வீதி). 209 பக்கம், விலை: ரூபா 390., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-41392-4-4. தினக்குரல் வார வெளியீடு, தினகரன் வார மஞ்சரி, வீரகேசரியின் வட பிராந்தியப் பதிப்பு, யாழோசை ஆகிய ஊடகங்களில் 2012-2013 காலகட்டங்களில் வெளியான ஆக்கங்களின் தேர்ந்த தொகுப்பு. யாழ்ப்பாண நினைவுகள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள மூன்றாவது பாகம் இது. யாழ் தேவியின் நினைவுகள், காணிவெல் கண்காட்சிக் காலங்கள், அருகிப்போன வேட்டையாடுதல், அருகிவரும் பாரம்பரிய உணவு வகைகள், பங்கர் கால நினைவுகள், சோதனைச் சாவடி காலங்கள், கடல்வலயத் தடையும் மீனவர் வாழ்க்கை முறையும், ரியுசன் கால நினைவு மீட்டல், போர்க்காலமும் மருத்துவமும், நல்லெண்ணையும் கைத்தொழிலின் கால மாற்றங்களும், அருகிப் போகும் சம்பிரதாயங்கள், பூங்காவனத் திருவிழா, யாழ்ப்பாணத்தில் கொம்யூனிக்கேஷன் யுகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும், வடபகுதிப் புகையிரதச் சேவைகள், எம்மவர் வாழ்விலும் நடைபெற்ற மணமகன் இல்லாத திருமணங்கள், சமூக மாற்றத்தை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பெண்களும் சைக்கிளும், காலவெள்ளத்தில் கரைந்துபோன மாலைநேரச் சந்தைகள் ஆகிய பதினேழு சுவையான கட்டுரைகளை இத்தொகுதியில் காணமுடிகின்றது. அனைத்தும் காலப்போக்கில் நாம் இழந்தபோன அனுபவங்களின் மீள்நினைவூட்டல்களாக உள்ளன. நூலாசிரியர் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார்.

ஏனைய பதிவுகள்

14872 வ.அ.இராசரத்தினத்தின் ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கிறது: நாவலும் கருத்துக்களும்.

த.அஜந்தகுமார். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, வைகாசி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). x, 122 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.,

14298 மேல் நீரேந்துப் பரப்பு முகாமைத்துவ திட்டத்திற்கான பண்ணை மண் பாதுகாப்பு சிபார்சுகள்: பாதுகாப்பு முறைகளும் நியமங்களும்.

எச்.பி.நாயக்ககோராள (மூலம்), சீரங்கன் பெரியசாமி (தமிழாக்கம்). கொழும்பு: மேல் நீரேந்துப் பரப்பு முகாமைத்துவத் திட்டம், சுற்றாடல் இயற்கை வளங்கள் அமைச்சு, 30, லக்சபான மாவத்தை, ஜயந்திபுர, பத்தரமுல்லை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை.

14172 வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கருணைமலர்: இராஜகோபுர மணிக்கோபுர மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர்-2011.

க.ஜெயவீரசிங்கம், க.சபாஜிதன், ப.தங்கவடிவேலு (மலர்க்குழு). முல்லைத்தீவு: அருள்மிகு ஸ்ரீ வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் தேவஸ்தானம், வற்றாப்பளை, 1வது பதிப்பு, 2011. (வவுனியா: எஸ்.பி.எஸ். ஆதவன் அச்சகம், மில் வீதி/ தண்ணீரூற்று: கலைவாணி அச்சகம்).(116) பக்கம்,

14880 வாழகம், பொருளாதாரம், சமூகம்.

சீ. டரில் போட் (ஆங்கில மூலம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், “சிறிமதி பாயா”, 58, சேர் ஏர்னெஸ்ட் த சில்வா வீதி, 1வது பதிப்பு, 1967. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).

12319 – சனத்தொகையும் குடும்ப வாழ்க்கைக் கல்வியும்: ஆசிரியர் ஆலோசகர்களுக்கான கைந்நூல்.

K.T.கனகரத்தினம் (பதிப்பாசிரியர்). மஹரகம: சனத்தொகையும் குடும்ப வாழ்க்கைக் கல்விக்கான செயற்றிட்ட வெளியீடு, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி, தெகிவளை). 80

12155 – தேவார திருவாசகத் திரட்டு: உரையுடன்.

ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை (பொழிப்புரை, தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, 3வது பதிப்பு, 1954, 1வது பதிப்பு, விகிர்தி வருடம் 1950. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை). (4), 68 பக்கம், விலை: 65 சதம்,