ஆ.இரகுநாதன், ஆ.சண்முகநாதன். கரவெட்டி: அமரர் வேலுப்பிள்ளை ஆறுமுகம் குடும்பத்தினர், பிராமணன் தோட்டம், கரவெட்டி மேற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2009. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).
viii, 114 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×16 சமீ.
தமது தந்தையாரின் நினைவுமலராக 18.4.2009 அன்று ஆ.இரகுநாதன், ஆ.சண்முகநாதன் ஆகிய இரு புத்திரர்களால் தமது குடும்பத்தின் சார்பாக வெளியிடப்பட்ட நினைவு மலர் இது. அறிவுக்கும் வாழ்க்கைக்கும் பயனுள்ள பல விடயங்களைத் தாங்கி வெளிவந்துள்ள நூல். அறிவியல் (பசுமைப் புரட்சியின் ஆறுமுகங்கள்/நிறைவான வெற்றிக்கு முறையான கற்றல்/ உணவே மருந்து/ நேரம் ஒதுக்குங்கள்), மருத்துவம் (சிறுநீரகச் செயலிழப்பு/சுகமான வாழ்விற்கு நலமான இதயம்/ புற்றுநோயும் உணவுப் பழக்கங்களும்/ ஆஸ்துமா/ தாய்ப்பாலூட்டல்), கலைகள் (இளங்கோவின் பார்வையில் கற்பு/ வில்லாண்ட காவலரும் சொல்லாண்ட பாவலரும்/ நடன இசைக் கலைகளின் தொடர்பு), ஆன்மீகம் (ஆன்மீகமும் ஆரோக்கியமும்/ விரதங்கள்/ இத ஒரு தெய்வீக குணம்), தகவல் தொழில்நுட்பம் (கணனி ஒன்றை/ ஜீ.சீ.ஈ. சாதாரண தரம், ஜீ.சீ.ஈ. உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான../ நெட் மீட்டிங்), விளையாட்டு (வலைப்பந்தாட்டம்/ கிரிக்கெட் விதிமுறைகள்/ கூட்டு நிகழ்ச்சி/ ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் “மழை விதி”)ஆகிய ஆறு பிரிவுகளுக்குள் பல்வேறு துறைசார் கட்டுரைகள் அடங்குகின்றன. கலாநிதி கு.மிகுந்தன், எப்.எக்ஸ்.ஜெயச்சந்திரா, க.முகுந்தன் ஆகியோர் கட்டுரைகளை எழுதியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56460).