ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் சிவநேசன் (மூலம்), க.சௌந்தரராஜ சர்மா, சு.நவநீதகிருஷ்ணன், இ.குபேசன் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: நூலக விழிப்புணர்வு நிறுவகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (யாழ்ப்பாணம்: தாயகம் டிஜிட்டல், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அருகில், திருநெல்வேலி).
xviii, 155 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் சிவநேசன் அவர்களின் முதலாமாண்டு நினைவு வெளியீடாக 25.12.2020 அன்று இந்நூல் வெளியிடப்பட்டது. “நூலக ஞான வித்தகர்” ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் சிவநேசன் அவர்களின் வாழ்வும் பணிகளும், ஈழத் தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும், நூல்விபர ஆவணவாக்கத்தில் ஈழத்தமிழர் பங்களிப்பு: சில சான்றுகள், சமூக அறிவியலுக்கான இருமொழிச் சொற்பொருளாய்வுக் களஞ்சியமொன்றின் வடிவமைப்பு -சமூகவியற் றுறையை சிறப்பு நோக்காகக் கொண்ட ஆய்வு, போருக்குப் பின்னரான சமூக அபிவிருத்தியில் பொது நூலகங்களின் புதிய பரிமாணங்கள், இலங்கையின் இடைநிலைக் கல்விப் பாடநூல்களில் தகவல் அறிதிறன் கூறுகள்: விஞ்ஞான பாடநூல்களை மையப்படுத்திய ஆய்வு, தகவல் தொழில்நுட்ப யுகமொன்றில் பாடசாலை நூலகங்களும் தகவல் அறிதிறனும், வளமான வாசிப்பு மானுடத்தின் மேம்பாடு, முப்பரிமாண நூலகம்: சான்றாதாரக் கல்வியின்முதன்மை மூலகம், கல்வி ஏள அறிவு, இணையம் ஏள நூலகம், வீட்டுக்கொரு நூலகம் ஆகிய ஆக்கங்களை இத்தொகுப்பு உள்ளடக்குகின்றது.