ஈ.ஆர்.திருச்செல்வம். யாழ்ப்பாணம்: ஈ.ஆர்.திருச்செல்வம், 1வது பதிப்பு, ஜீன் 2016. (யாழ்ப்பாணம்: சிவராம் பதிப்பகம், கல்லூரி வீதி).
x, 126 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 16.5×11 சமீ., ISBN: 978-955-43169-0-4.
ஈ.ஆர்.திருச்செல்வம், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளநிலைக் கலைமாணிப் பட்டம் பெற்றவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இரு ஆண்டுகள் நாடகம் மற்றும் அரங்கியல் பட்டப்பின் படிப்பினை மேற்கொண்டவர். 1961 இல் ஈழநாடு மூலம் இதழாளராக அறிமுகமானார். அரைநூற்றாண்டு காலத்துக்குமேல் ஊடகத்துறையில் பணியாற்றிவருகின்ற இவர் இலங்கையில் ஒரு சிரேஷ்ட பத்திரிகையாளராகக் கருதப்படுபவர். இந்நூலில் அவர் இதழியல் அடிப்படைகளை ஆசிரியர் பணி, ஆசிரியர் கடமைகள், ஆசிரியர் பொறுப்பு, ஆசிரியர் தலையங்கம், முதன்மை உதவி ஆசிரியர், உதவி ஆசிரியர் குழாம், செய்தி ஆசிரியர், செய்தியாளர் கடமையும் பொறுப்பும், எது செய்தி?, செய்தி அம்சங்கள், செய்தி அமைப்பு, செய்தி எழுதுதல், பனிமூட்ட சுட்டு, செய்தி மூலங்கள், செய்திக் களங்கள், சுயாதீன இதழாளர், புலனாய்வுச் செய்தித்துறை, நேர்காணல், நேர்காணல் வகைகள், பத்தி எழுதுதல், அருஞ்சொல் விளக்கம், பின்னுரை ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.