ரூபன் மரியாம்பிள்ளை. யாழ்ப்பாணம்: பிஷப் சவுந்தரம் மீடியா சென்டர், இல. 891, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, ஜீன் 2020. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).
xviii, 176, (16) பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 25×18 சமீ., ISBN: 978-955-1395-12-4.
விசேட செய்தி அறிக்கையிடல் பிஷப் சவுந்தரம் மீடியா சென்டரின் 13ஆவது வெளியீடாகும். செய்திக் களங்கள், விளையாட்டு, பதிப்புரிமை, குற்றச் செயல்கள், செய்தியாளர் மாநாடு, மரணச் செய்திகள், நடத்துனர் பணி-1, செய்தி நடத்துனர், நடத்துனர் பணி-2, சித்திரிப்பு, புலனாய்வு, சமயச் செய்தி அறிக்கையிடல் ஆகிய பன்னிரு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. விசேட செய்தி அறிக்கையிடுதல் என்பது ஊடகத் துறையின் புதிய பரிமாணங்களில் ஒன்றாகும் சாதாரணமான அறிக்கையிடல் வழிமுறைகளில் இருந்து மேம்பட்டதாகவும் ஆழமான அறிவுடனும், புரிதலுடனும் துறைகள் சார்ந்த விசேட செய்தி அறிக்கையிடல் மேற்கொள்ளப்படவேண்டுமென்பது ஊடகத் தொழில்சார்வாண்மை விருத்தியின் பேறாக இன்று அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் பார்க்க: 19-ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள். 15997