15051 சமூகமே பதில்சொல்: உளவியல் சார்ந்த அனுபவக் குமுறல்கள்.

வெலிவிட்ட ஏ.சீ.ஜறீனா முஸ்தபா. கடுவெல: ஏ.சீ.ஜறீனா முஸ்தபா, ஜே.எம். வெளியீடு, 120 எச், போகஹவத்தை வீதி, வெலிவிட்ட, 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (கொழும்பு 14: I.P.C.Printing Press 24, டி வாஸ் ஒழுங்கை).

xiii, 89 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22.5×16 சமீ., ISBN: 978-955-7359-00-7.

இந்நூலில் பெண்கள் தொடர்பான உளவியல் பிரச்சினைகளை உள்ளடக்கியதாக கசங்கிய மலரொன்றின் கண்ணீர்க் கதை, வேலியில்லா வெள்ளாமைகள் என்னவாகும்? யார் அந்த பாத்திமா? என் வாப்பா எனக்கு வேண்டாம், பாசம் என்பது பிள்ளைகளை வேலைசெய்ய விடாமல் வைத்திருப்பதல்ல, இது யார் செய்த குற்றம், கண் இழந்த மேகங்கள், பணம் தான் வாழ்க்கை என்றால் எந்தப் பெண்ணுக்கும் திருமணம் என ஒன்று தேவையில்லை, அலிம்களைக் குற்றம் சொல்லக் கூடாதா? பெண்கள் இச்சமூகத்தின் கண்களா கண்ணீரா, இது ஒரு மாணவனின் கதை, சூனியத்தோடும் சூழ்நிலையோடும் போராடினோம், இன்னும் இரண்டு ரிஸானாக்கள் எப்படி வந்தார்கள்? சமூகமே பதில் சொல், அச்த மூன்று நாட்கள், கணவனுக்குக் கல்யாணம் ஆகிய 16 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்;ளன. வெலிவிட்ட ஏ.சீ.ஜறீனா முஸ்தபாவின் பத்தாவது நூல் இது.

மேலும் பார்க்க: சிந்தனைப்பூக்கள் பாகம் 5 15053

155.4 குழந்தை உளவியல்

மேலும் பார்க்க: இயல்பு மீறிய குழந்தைகள். 15245

ஏனைய பதிவுகள்