எஸ்.ஏ.ஐ.மத்தியூ. கல்முனை: எஸ்.ஏ.ஐ.மத்தியூ, 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2013. (கல்முனை: கோல்டன் அச்சகம்).
viii, 84 பக்கம், விலை: ரூபா 250.00, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-44423-0-6.
மட்டக்களப்பு, திருக்கோணமலை மறைமாவட்டங்களில் வழக்கிலுள்ள பல பழமொழிகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்வியல் உண்மைகளை எளிமையான கட்டுரை வடிவில் இந்நூலில் தந்திருக்கிறார். ஆசிரியரின் 55ஆவது நூல் இதுவாகும். ஆற்றிலே போட்டாலும் அளந்து போடவேண்டும், நித்தமும் போனால் முற்றமும் சலிக்கும், எறும்பூரக் கற்குழியும், அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது, ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும், உப்பிட்டவரை உள்ளளவும் நினை, பாம்பின் கால் பாம்பறியும், களவையும் கற்று மற என இன்னோரன்ன தலைப்புகளில் வாழ்வியல் ஒழுக்கத்தை போதிக்கும் நோக்கில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4621).