15064 சாரதியம் : விவேகசிந்தாமணியின் 135 பாடல்கள் உரையுடன்.

சபாபதி முதலியார் (பரிசோதித்தது). யாழ்ப்பாணம்: அமரர் வைத்திலிங்கம் குருசாமி நினைவு வெளியீடு, உதயசூரியன் வீதி, உடுவில், 1வது பதிப்பு, நவம்பர் 2004. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், 103, பலாலி வீதி).

(2), 46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×15 சமீ.

விவேக சிந்தாமணி என்பது ஒரு பழைமையான தமிழ் நூலாகும். இது அனுபவ மூதுரைகளைக் கொண்ட தமிழ் செய்யுள் தொகுப்பாகும். இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியாது. எந்த காலத்தில் இயற்றப்பட்ட நூல் என்பதும் தெரியாது. நாயக்கர் காலத்தில் இந்த நூல் உருவாகியிருக்கலாம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். இந்நூலில் சிந்தனைக்குகந்த, பொருள் பொதிந்த வார்த்தைகளால் நீதிகளும், அழகியலும் செய்யுள் நடையில் சொல்லப்பட்டு இருக்கும். தனிப்பாடல்களாக இருந்த பாடல்களைத் தொகுத்து இந்த நூல் உருவானது என்ற அனுமானமும் உண்டு. அஷ்டாவதானம் சபாபதி முதலியார் 19 ஆம் நூற்றாண்டில் பலவகை செய்யுள் நூல்களை இயற்றிய புலவர்களுள் ஒருவர். இவர் சந்தப் பாடல்களை விரைவாகப் பாடுவதில் வல்லவர். தலபுராணம், கலம்பகம் உள்ளிட்ட பொருள்களில் 33 நூல்கள் எழுதியுள்ளார். இவர் சென்னைப் புரசைவாக்கத்தில் பிறந்தவர். அங்குத் தாண்டவராய முதலியாரிடத்தும் மழவை மகாலிங்கையரிடத்தும் தமிழ் கற்றவர். இவர் அஷ்டாவதானம் செய்வதில் வல்லவர்.

ஏனைய பதிவுகள்

14132 சுழிபுரம்-பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர்.

04.04.2004. பால. கோபாலகிருஷ்ண சர்மா (தொகுப்பாசிரியர்). சுழிபுரம்: பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (கொழும்பு 12: வாக்மி அச்சகம், 258/3, டாம் வீதி). iii, 92 பக்கம்,