திருவள்ளுவர் (மூலம்), மு.வரதராசனார் (உரையாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
xviii, 278 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-9233-82-4.
திருக்குறளை இலகுவாக விளங்கிக் கொள்ளத்தக்க வகையிற் பதம்பிரித்து, பேராசிரியர் மு.வரதராசனார் அவர்களது தெளிவுரையோடு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. “அறத்துப்பால்” என்ற முதற் பிரிவில் பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் ஆகியனவும், ”பொருட்பால்” என்ற இரண்டாம் பிரிவில் அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் ஆகியனவும், ”இன்பத்துப்பால்” என்ற மூன்றாம் பிரிவில் களவியல், கற்பியல் ஆகியனவும் உரைவிளக்கத்துடன் தரப்பட்டுள்ளன.