ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச சேவைகள்; பௌத்த சங்கம், 90/15, வீரவ பிளேஸ், றாகம வீதி, கடவத்தை, 1வது பதிப்பு, மே 2006. (கொழும்பு-01: ANCL, Commercial Printing Department).
iv, 116, (2), 14, x, 124 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
இலங்கையின் வெசாக் தினத்தை முன்னிட்டு 71ஆம் ஆண்டாக அரசாங்க சேவைகள் பௌத்த சங்கத்தின் பிரசுரக் கமிட்டியால் வெளியிடப்படும் மும்மொழி மூல ஆண்டு மலர். இதில் தமிழ்ப் படைப்பாக்கங்களாக வாழ்த்துச் செய்தி (அதி மேதகு சனாதிபதி)யும், புத்த மதத்தில் இந்துமத தத்துவங்கள் (த.கனகரத்தினம்), பகவானின் கண்ணீர் – கவிதை (ஏ.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்), நீர்ப்பாசன நிபுணர் நீரை நெறிப்படுத்துவார் (ருவன் பண்டார அதிகாரி) ஆகிய மூன்று படைப்பாக்கங்களும்;; இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38953).