நிலாந்தினி செந்தூரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 2வது பதிப்பு, 2021, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 145 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-337-2.
அறிமுகம், ஆலய வரலாறு, தேசத்து வன்னிமை, கோயிலும் சமூகமும், புராதன சின்னங்களும் சொத்துடைமை ஆவணங்களும், முடிவுரை ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக கோயிற் புகைப்படங்கள், தேர்ச் சிற்பங்கள், கோயிற் தளபாடங்கள், உறுதி ஆவணங்கள் என்பன இணைக்கப்பட்டுள்ளன. நிலாந்தினி செந்தூரன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் சிறப்பு இளங்கலைமாணிப் பட்டத்தையும் களனிப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றவர். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின்; வரலாற்றுத்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.