சாந்தி நாவுக்கரசன், தேவகுமாரி ஹரன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).
vi, 202 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 24.5×19 சமீ., ISBN: 978-955-9233-27-5.
2013இல் ஜ{ன் 28-30 காலகட்டத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒழுங்கு செய்திருந்த ‘மூவர் தமிழும் சைவ நெறியும்” என்ற ஆய்வரங்கினை ஒட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர். இதில் திருஞானசம்பந்தர் தேவாரம்-முதல் மூன்று திருமுறைகள் (ச.வே.சுப்பிரமணியம்), திருநாவுக்கரசர் தேவாரம் – நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள் (சொ.சிங்காரவேலன்), சுந்தரர் தேவாரம் – ஏழாந் திருமுறை (மு.சண்முகம்பிள்ளை), பாடல் பெற்ற தலங்கள் (சி.பத்மநாதன்), சைவ மறுமலர்ச்சியும் சம்பந்தர் சமயப் பிரசாரமும் (ஆ.வேலுப்பிள்ளை), திருமுறைகளில் இலக்கிய வளம் (சி.பாலசுப்பிரமணியன்), முதல் திருமுறையில் ஆடல் குறிப்புகள் (இரா.கலைக்கோவன்), தேவாரமும் சிற்பக்கலையும் (தி.இராசமாணிக்கம்), தமிழிசைக்கு ஞானசம்பந்தர் தந்த புதுமைப்பெண்(ஞான குலேந்திரன்), தேவரப் பண்கள் (து.ஆ.தனபாண்டியன்), வரலாற்றில் திருமுறை ஓதுவார் (வெ.வேதாசலம்), தேவார மூவர் இசைத் தொண்டு (த.அமிர்தலிங்கம்), அப்பரடிகளும் சமண சமயமும் (சொ.சிங்காரவேலன்), தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலங்கள்-275 (சுலோசனா வெங்கடேசன்) ஆகிய 14 ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.