15125 சேக்கிழார் நாயனார் சரித்திரம்.

ஆறுமுக நாவலர். கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

vi, 10 பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-9233-92-3.

சங்ககாலம் முதல் இக்காலம் வரை தோன்றிய தமிழ்ப் புலவர்களிற் சேக்கிழாருந் திருவள்ளுவருமே தெய்வப் புலவர்கள் எனப் போற்றப்படுகின்றார்கள். இவர்களிற் சேக்கிழார் பெரியபுராணந் தந்த பெருமைக்குரியவர். திருவள்ளுவர் உலகப் பொதுமறையான திருக்குறள் தந்த பெருமைக்குரியவர். சேக்கிழார் செயற்கரிய செய்த நாயன்மார்களது வரலாற்றைப் பெரியபுராணம் என்னுஞ் சைவச் செந்தமிழ்க் காவியமாகத் தந்த காரணத்தாற் பெருமைக்குரியவராக விளங்குகின்றார். இவரது வரலாற்றை உமாபதி சிவாசாரியார் சேக்கிழார் புராணம் என்னும் பெயரிற் பாடியுள்ளார். செய்யுள் நடையில் இருந்த பெரியபுராணத்தை எல்லோரும் படித்துப் பயன்பெறும் வகையிற் பெரியபுராண வசனம் என்ற வகையிற் தந்த நாவலர் பெருமான், உமாபதி சிவாசாரியார் தந்த சேக்கிழார் வரலாற்றையும் வசன வடிவிற் தந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

17321 அழகாய் அசையும் கைகள் (2.2).

மேகலா இரஞ்சித் (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5