15129 திருவிளையாடற் புராணம்.

கே.வி.குணசேகரம். கொழும்பு: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 140 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-624-5015-00-9.

இந்து சமய அறநெறிக் கல்வியின் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக வெளியிடப்படும் பாடத்துணை நூல். சிவபெருமானின் அறுபத்துநான்கு திருவிளையாடல்களையும் சைவச் சிறார்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். திருவாலவாயின் பெருமை, இந்திரன் பழிதீர்த்த படலம், வெள்ளை யானை சாபந் தீர்த்த படலம், திருநகரம் கண்ட படலம், தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம், தடாதகைப் பிராட்டியார் திருமணப் படலம், வெள்ளியம்பலத்திற் திருக்கூத்தாடிய படலம், குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம், அன்னக்குழியும் வைகையும் அழைத்த படலம், ஏழு கடலழைத்த படலம், மலையத்துவனை அழைத்த படலம், உக்கிரபாண்டியன் திருவவதாரப்  படலம், உக்கிர குமாரனுக்கு வேல்வளை கொடுத்த படலம், கடல் சுவற வேல்விட்ட படலம், இந்திரனது முடிமேல் வளை எறிந்த படலம், மேருவைச் செண்டால் அடித்த படலம், வேதத்திற்குப் பொருள் அருளிச் செய்த படலம், மாணிக்கம் விற்ற படலம், வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம், நான்மாடக் கூடலான படலம், சித்தராக வந்த படலம், கல்யானைக்குக் கரும்பு கொடுத்த படலம், யானையெய்த படலம், விருத்தகுமார பாலனாக வந்த படலம், கால்மாறி ஆடின படலம், பழியஞ்சின படலம், மாபாதந் தீர்த்த படலம், அங்கம் வெட்டின படலம், நாகமெய்த படலம், மாயப் பசுவை வதைத்த படலம், மெய்க்காட்டிட்ட படலம், உலவாக்கிழி அருளிய படலம், வளையல் விற்ற படலம், அட்டமாசித்தி உபதேசித்த படலம், விடை இலச்சினை இட்ட படலம், தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம், இரசவாதப் படலம், சோழனை மடுவில் வீட்டிய படலம், உலவாக்கோட்டை அருளிய படலம், மாமனாக வந்து வழக்குரைத்த படலம், வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய படலம், சிவபெருமான் விரகு விற்ற படலம், திருமுகம் கொடுத்த படலம், பலகையிட்ட படலம், இசைவாது வென்ற படலம், பன்றிக் குட்டிகளுக்கு முலை கொடுத்த படலம், பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம், கரிக்குருவிக்கு உபதேசஞ்செய்த படலம், நாரைக்கு முத்தி கொடுத்த படலம், திருவாலவாயான படலம், சுந்தரபேதம் பெய்த படலம், சங்கப் பலகை தந்த படலம், தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம், கீரனைக் கரையேற்றிய படலம், கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம், சங்கத்தார் கலகந் தீர்த்த படலம், இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம், வலை வீசிய படலம், திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம், நரியைப் பரியாக்கிய படலம், பரிகள் நரிகளாகிய படலம், மண் சுமந்த படலம், பாண்டியனது சுரந் தீர்த்த படலம், சமணரைக் கழுவேற்றிய படலம், வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம், அருச்சனைப்படலம், திருவிளையாடற்புராண நூற்பயன் ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Wie gleichfalls Funktioniert Paysafecard?

Content An irgendeinem ort Darf Selbst Allseits Via Der Paysafecard Angeschlossen Saldieren? | wichtiger Link Paysafecard Online Zulegen Durch Natel Entsprechend Kann Meine wenigkeit Den