சிவா சின்னப்பொடி. கோயம்புத்தூர் 641015: விடியல் பதிப்பகம், 23/5, ஏ.கே.ஜீ.நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (சென்னை: அருணா எண்டர்பிரைஸஸ்).
188 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
இந்நூல் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய சாதிய, சமூக ஒழுங்கு மற்றும் சூழலை ஆசிரியர் தன்னுடைய பார்வையில் தன் அனுபவங்களினூடாகப் பதிவுசெய்த ஒன்றாகும். தமிழ்ச் சமூகத்தின் அக ஒடுக்குமுறைகளை வரலாற்றுரீதியான அதன் பன்முகத்தன்மையைப் பற்றிப் பேசும், நூலாக இது இருக்கிறது. இந்த நூல் சாதிய ஒடுக்குமுறையையொட்டிய பல புதிய தரவுகளைக் கொண்டு இருப்பதுடன், அவை வரலாற்றுக்கு புதியவையாகவும் உள்ளன. சிறுபான்மைத் தமிழர் மகாசபை பற்றியும் நிறையவே தகவல்கள் கிடைப்பதைப்போல கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பொன். கந்தையா அவர்களைப் பற்றிய பல தகவல்களும், சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் அவர் பக்கபலமாகச் செயற்பட்ட விதங்கள் பற்றியும் சிவா சின்னப்பொடி அவர்கள் எழுதியிருக்கின்றார். 1999இல் தொடராக எழுத ஆரம்பித்து 2013இல் நிறைவடைந்திருந்த ஒரு சமூக வரலாற்றுப் பதிவு இது.