க.குணராசா. யாழ்ப்பாணம்: வி.மகாலிங்கம், ரேகா வெளியீடு, 1வது ஒழுங்கை, பிறவுன் வீதி, 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி).
48 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: ரூபா 6.50, அளவு: 20×14 சமீ.
க.பொ.த. உயர்தர புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும், G.A.Q பாடநெறியினைப் பயிலும் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையிலும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. எண்களாகப் பெறப்பட்ட தரவுகளை ஒழுங்குபடுத்தி, ஆராய்ந்து, முடிவுகளைப் பெற்று, ஒரு நாட்டின் பல்துறைசார்ந்த அபிவிருத்திகளுக்கும் பயன்படுத்த உதவும் அறிவியல் துறையாக புள்ளிவிபரவியல் (Statistics) விளங்குகின்றது. புள்ளிவிபரவியலின் தரவுகளே (Data) முதன்மையானவை. நவீன பொருளாதார அமைப்பில் தரவுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அதனால் அத் தரவுகளை ஒழுங்குபடுத்தி ஆராய்ந்து பொருத்தமான முடிவுகளை எடுக்கவேண்டியது அவசியமாகின்றது. இந்நூலில் பின்வரும் மூன்று புள்ளிவிபரவியல் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன. 1. புள்ளிவிபரத் தரவுகளை ஒழுங்குபடுத்துதல், 2. ஒழுங்குபடுத்திய தரவுகளை வரைபடங்களில் அமைத்தல், அவற்றிலிருந்து பொருத்தமான முடிவுகளைப் பெறுதல்.
(இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 74244).