ஷெல்டன் யூ. கொடிக்கார (தொகுப்பாசிரியர்), நா.செல்வக்குமாரன் (தமிழாக்கம்). கொழும்பு: அனைத்துலக ஆய்வுக்கான பண்டாரநாயக்க நிலையம், S.W.R.D.பண்டாரநாயக்க தேசிய நினைவு மன்றம், 1வது பதிப்பு, 1990. (கல்லச்சுப் பிரதி).
(10), 213 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 28.5×21 சமீ., ISBN: 955-9147-08-0.
1990 ஜனவரியில் கொழும்பு, சர்வதேசக் கற்கைக்கான பண்டாரநாயக்க நிலையத்தின் அனுசரணையில் நடாத்தப்பட்ட இந்திய-இலங்கை தொடர்புகள் பற்றிய ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளையும் அதில் இடம்பெற்ற கலந்துரையாடலையும் இந்நூல் உள்ளடக்குகின்றது. ஆரம்ப உரை (சிறிமா ஆர்.டீ.பண்டாரநாயக்க), பிரதான உரை: இந்திய-இலங்கை உறவுகளின் புவித்திறமுறை நோக்கு (ஷெல்டன் யூ. கொடிக்கார), தற்காலத்துக்கு முன்னைய காலங்களில் தெற்காசியப் பிரதான நாடுகளுடன் இலங்கை கொண்டிருந்த உறவு பற்றிய ஒரு நோக்கு (சேனக்க பண்டாரநாயக்க), தென்னாசியாவும் சர்வதேச மாற்றமும் (பாபானி சென் குப்தா), இனப்பிரச்சினையும் இந்திய-இலங்கைச் சமாதான வழிமுறையும்: 1983 ஜ{லை-1987 ஜ{லை (ஸ்ரான்லி ஜயவீர), காந்தி-ஜயவர்த்தனா சமாதான உடன்படிக்கையும் அதன் பின்னரான இந்திய-இலங்கை உறவின் போக்கும் (எஸ்.டி.முனி), இந்திய-இலங்கை உறவுகளில் தமிழ்நாட்டின் பங்கு (இசத் ஹ{சைன்), இலங்கைச் சமூகத்துள் நாடற்றவர்களின் ஒன்றிணைப்பு (பேற்றம் பஸ்தியாம்பிள்ளை), இந்திய-இலங்கைப் பொருளாதாரக் கூட்டுறவு (சு.யு.ஆ.ஊ.வணிகரட்ன), இந்திய-இலங்கை உறவுகளில் செய்தித் துறையின் பங்களிப்பு (சிங்ஹ ரட்ணதுங்க), இந்திய-இலங்கை உறவுகள்: எதிர்கால நோக்குகள் (ஜோர்ஜ் வர்கீஸ்) ஆகிய 11 ஆய்வுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48480).