சி.கருணானந்தராசா (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1977. (யாழ்ப்பாணம்: தங்கராஜா பிரின்டிங் வேர்க்ஸ், மானிப்பாய் வீதி).
(28), 50 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.
இவ்விதழில் வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன் வளர்ச்சிப் பாதையிலே தமிழ்ச் சங்கம் (ச.பரமலிங்கம்), வீரசூரியாவுக்கு வீர அஞ்சலி (க.மெய்யநாதன்), இளங்கதிரே! (சுபாஷினி சுப்பிரமணியம்), இலங்கையின் பொருளாதாரத்தில்-(எம்.அப்துல் ஸமான்), சோஷலிசமும் தேசியமயமும் (சி.சிவசேகரம்), மூன்றாம் உலக நாடுகளின் எழுச்சி (க.உருத்திரகோடீஸ்வரன்), இலங்கையின் இனவாதத்தின் யதார்த்தநிலை (ஸ்ரீ.ச.ஜெயசிங்), நவசீனாவின் சிற்பி மா ஓ சேதுங் (ஏ.ஆர்.எம்.இக்பால்), தலைமைத்துவம் (வி.சண்முகநாதன்), மலையகத் தோட்டத் தொழிலாளர் (க.மகாலிங்கம்), ஆசிய இலக்கியங்கள் (சி.தில்லைநாதன்), இயக்கம்-இலக்கியம்-பிரச்சாரம் (க.அருணாசலம்), கலை இலக்கியம் ஒரு கண்ணோட்டம் (சசி கிருஷ்ணமூர்த்தி), இலக்கிய இருட்டடிப்பு (தோப்பூர் பளீல்), உழைப்பாளிகளிடமிருந்து படைப்பாளிகளுக்கு (புதுவை இரத்தினதுரை), நிலைப்பது எது? (உமாச்சந்திரா முத்தையா), பொடியே செய்வோம் (ச.அருளானந்தம்), கவிஞனுக்கு (த.அன்பானந்தன்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.