15260 இளங்கதிர்: 23ஆவது ஆண்டு மலர் 1978/1979.

பி.புனிததாஸ் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1979. (யாழ்ப்பாணம்: தங்கராஜா பிரின்டிங் வேர்க்ஸ், மானிப்பாய் வீதி).

(12), 76 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

இவ்விதழில் வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன் பொலன்னறுவை வானவன் மாதேவி ஈஸ்வரன் கோயில் அதிராஜேந்திரன் காலக் கல்வெட்டு (செல்லத்துரை குணசிங்கம்), திருவள்ளுவர் கூறும் ஒழிபியல் (தவமணிதேவி சாம்பசிவம்), தமிழ் இலக்கிய வடிவங்கள் (சி.தில்லைநாதன்), இறுதி ஏற்பாடு: (ஸ்ரீலஸ்ரீ நந்தகோபாலகிரி ஸ்தாபகர், சர்வமத சங்கம், அன்னை சர்வமத சங்கம்), மாணவரும் ஒழுக்கமும் (ம.சிவகுமாரன்), மகத்தான வாழ்விற்கு உண்மையான உழைப்பின் பங்களிப்பு (அ.தவஞானதாஸ்), இலங்கையும் ஈழமும்-சில வரலாற்றுக் குறிப்புகள் (ஆ.வேலுப்பிள்ளை), மங்கள வாத்தியம்: நாகசுரம் (சச்சி ஸ்ரீகாந்தா), கற்பனை அரசும் வன்முறையும் (க.ஆனந்தநாதன்), நான் அவை அவர்கள் (க.ஆதவன்), சுதந்திர வர்த்தக வலயம்: சூழல் பாதுகாப்பியல் நோக்கு (ச.ஏ.பிரதாபர்), புதுக்கவிதையும் புதுமை உணர்வுகளும் (எஸ்.டேவிட்). அரசியல் மெய்யியல் பார்வையில் சுதந்திரம் என்ற எண்ணக்கரு (தம்பையா இராஜரத்தினம்), நான் ஏணியாகின்றேன் (எஸ்.அமிர்தாஞ்ஜினி) ஆகிய படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்