நிசாந்தனி லோறன்ஸ் (இதழாசிரியர்). கொழும்பு: நல்லாயன் கன்னியர் மடம், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(12), 215 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×16 சமீ.
கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் ஆசிரியர்கள், மாணவர்களின் படைப்பாக்கங்களுடன் வெளியாகிய இம்மலரில் முதல் 46 பக்கங்களிலும் மாத்திரமே படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. எஞ்சிய 169 பக்கங்களிலும் வர்த்தக விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. நவீன தொலைத்தொடர்பு சாதனங்களின் நன்மை-தீமை, மனிதனோடு இணைந்த இணையம், நல்லொழுக்கத்தின் சிறப்பு, பெண் விடுதலையும் தமிழ்ப் பெண்களும், தாய் சொல்லைத் தட்டாதே, உண்மை உயர்வைத் தரும், கை கொடுக்கும் கல்வி, இளைஞர்-யுவதிகள் எதிர்நோக்கும் சவால்கள், கடல், பாடசாலைக் காலம், பூங்காற்றே, எந்தையும் தாயும், காயம் ஆகிய தலைப்புகளில் இப்படைப்பாக்கங்கள் ஆசிரியர்களாலும் மாணவர்களாவும் எழுதித் தொகுக்கப்பட்டுள்ளன.