15301 கூத்திசை நாடகம்.

மு.அருட்பிரகாசம். யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xiv, 150 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

இந்நூலில் “அரிச்சந்திரா” என்ற இசை நாடகமும், “நா அழியா நாயகன்” என்ற நாட்டுக்கூத்தும், ”இவரே உலகின் ஒளி” என்ற கூத்திசை நாடகமும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கூத்திசைப் பாவலன் முடியப்பு அருட்பிரகாசம் 07.10.1944இல் பாஷையூரில் பிறந்து தமது சிறுவயதில் இருந்தே நாட்டுக்கூத்துக் கலையில் ஆர்வமுடையவராகி 1952இல் ஞானசவுந்தரி நாட்டுக்கூத்தில் சேனாதிபதியாக நடித்தது முதல் கலையுலகில் கால்பதித்து பாைஷையூரின் புகழ்பெற்ற அண்ணாவிமார்களான வஸ்தியாம்பிள்ளை, பிலிப்பையா ஆகியோரிடம் நாட்டுக்கூத்தினைப் பயின்றவர்.

ஏனைய பதிவுகள்

14389 வணிக புள்ளிவிபரவியல் : மாதிரி எடுப்பும் புள்ளிவிவர அனுமானமும்: க.பொ.த.உயர்தரம்.

பொன்னுத்துரை ஐங்கரன். யாழ்ப்பாணம்: பொன்னுத்துரை ஐங்கரன், இணுவில் தெற்கு, இணுவில், 1வது பதிப்பு, பெப்ரவரி 1998. (கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403, 1/1, காலி வீதி). (4), 134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,