அண்ணாவியார் மு.அருள்பிரகாசம். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (யாழ்ப்பாணம்: துசி என்ரபிரைஸ், வஸ்தியான் சந்தி, சுண்டிக்குளி).
xvi, 80 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ.
இஸ்ரவேல் நாட்டுப் பாரம்பரியத்தில் காணப்படும் ‘விடுதலைப் பயணம்” என்னும் வரலாற்று நிகழ்வை மரபு மாறா நாட்டுக்கூத்துக் கலையாக படைப்பதிலும், நீண்ட விவிலிய விடுதலைப் பயண கதைத் தொடரை பிசகின்றி நாடக பாடமாக அமைப்பதிலும்; ஆசிரியர் வெற்றிகண்டுள்ளார். விவிலியத்திலுள்ள விடுதலைப் பயண (யாத்திரை யாகமம்) நூலின் மையமாக அமையும் பாரவோனின் அடிமைத்தனத்தில் இருந்து இஸ்ராயேல் மக்களை மோயீசன் விடுதலை செய்த வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு இக்கூத்து ஆக்கப்பட்டுள்ளது. இதுவரை 17 கூத்துக்கள் வரை எழுதியுள்ள அண்ணாவியார் மு.அருள்பிரகாசத்தினால் நூலுருவில் வெளியிடப்படும் மூன்றாவது நூல் இதுவாகும். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63202).