15319 ஈழத்துப் பூராடனாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தச் சிந்தனைகள்.

க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்). களுவாஞ்சிக்குடி: ஜீவா பதிப்பகம், பிரதான வீதி, தோற்றாதீவு, 1வது பதிப்பு, நவம்பர் 1981. (களுவாஞ்சிக்குடி: மனோகரா அச்சகம், தோற்றாதீவு).

(16), 58 பக்கம், அட்டவணை, புகைப்படம், விலை: ரூபா 10.00, அளவு: 20.5×14 சமீ.

“தற்போதைய தமிழ் வரிவடிவ அமைப்புகளில் பழையன கழிந்து புதியன புகுத்தப்பட்ட பின்னர், புகுத்தப்பட்ட புதியவற்றில் குறை தெரிந்து பழையன மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. காலச்சுவடுகளின் தேய்வுகள், உரசல்கள் என்பவற்றை எதிர்த்தும், ஏற்றும், மறைவுகளாலும் தோற்றங்களாலும் உறுதியாக்கப்பட்டும், செப்பமிடப்பட்டுமுள்ள நீர்மை இவ்வரி வடிவங்களில் புலனாகின்றது. ‘க்ஊ’ ஏன் ‘கூ’வாக வரிவடிவு பெற்றது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை அனுபவத்தினால் சரியெனக் கண்டு புகுத்தப்பட்ட மாற்றங்கள். தமிழ் எழுத்துக்களில் மாற்றந் தேவை என விழைந்தவர்களுள் நானும் ஒருவன். எனது ”எழுத்து” நூலில் ஒரு அதிகாரமாக இதனைப் புகுத்தினேன். இவ்வாறு சொல்லத் துணிந்தமைக்கு சில காரணங்கள் இருந்தன. ஆனால் தனி முயற்சியாக அறிவு வறுமையுடன் சாதனங்களின் உதவியின்றி ஒரு குறுகிய ஆய்வின் பேறாக எழுத்துச் சீர்திருத்தம் அனாவசியமானது என்பதற்குப் பல காரணங்கள் இருப்பது தெரியவந்தது. இதே முயற்சி கூட்டுமுயற்சியாக அறிவாற்றல்களுடன் நவீன சாதனங்களுடன் செய்யப்படும்போது வேறு பல பலமான காரணங்கள் வெளிவரும். இந்நூலில் கூறப்பட்டவை யாவும் தீர்ப்பானவையோ முடிவானவையோ அல்ல. அவை எனது சிந்தனைகளே. ஒவ்வொரு சிந்தனையையும் விரித்துக் கூறினால் ஏறக்குறைய அதுவே பத்து மடங்காக விரியலாம். ஒவ்வொரு சிந்தனையின் பின்னாலும் அவ்வளவு விரிவான விசயங்கள் தொக்கி நிற்கின்றன.” (என்னுரையில், ஈழத்துப் பூராடனார்). (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1023). 

ஏனைய பதிவுகள்

12489 – நவரசம்: நாடகவிழா மலர் 2003.

கொழும்பு: ரோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம், 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 2: அரசன் அச்சகம்). 190 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. கொழும்பு, ரோயல் கல்லூரியின் நவரங்கஹல