15331 கட்டுரைக் கதிர்: உயர்தர வகுப்புகளுக்குரியது.

க.பே.முத்தையா, ம.விக்ரர். யாழ்ப்பாணம்: க.பே.முத்தையா, சுண்டிக்குளி, 2வது (திருத்திய) பதிப்பு, 1959, 1வது பதிப்பு, 1956. (யாழ்ப்பாணம்: சென்.ஜோசப் கத்தோலிக்க அச்சகம்).

(6), 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

சொல்வளமும் கருத்தாழமும் பொதிந்த சுவையான கட்டுரைகளை மாணவர் எழுதிப் பழகுவதற்காக இந்நூலில் தமிழ், உழவுத் தொழில், நாடகக் கலை, அன்பு, ஐக்கிய நாடுகளின் சங்கம், திருக்கோணமலை, இயற்கையின்பம், நூற்கூடம், இசையின்பம், பொலநறுவை, மதுவிலக்கு, அச்சந் தவிர், வானவூர்தி, நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், செயற்கைச் சந்திரன், சாரணர் இயக்கம், சிவனொளிபாதமலை, காந்தி மகான், சனசமூக நிலையங்கள், சோமசுந்தரப் புலவர் ஆகிய 20 மாதிரிக் கட்டுரைகளை எடுத்துக்காட்டாய் தந்துள்ளனர். இவை பந்தியமைப்பு முறையை மாணவர் பயிலுவதற்காகச் சட்டங்களின் கீழ் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. மேலும் பயிற்சிப் பகுதிகளாக ஐம்பது கட்டுரைகளுக்கான சட்டகங்களும் முப்பது கட்டுரைத் தலைப்புகளும் கதையமைப்புப் பயிற்சியும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூலின் மாதிரிக் கட்டுரைகளை படிக் கற்களாகக் கொண்டு இச்சட்டகங்களை மாணவர் விரித்தெழுதிப் பயிற்சி பெறுதலே இந்நூலின் குறிக்கோளாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21696).

ஏனைய பதிவுகள்

14087 இரண்டாவது உலக இந்து மாநாடு சிறப்பு மலர்: மன்னார் மாவட்டம்.

மலர்க் குழு. மன்னார்: மாவட்ட விழாக் குழு, இரண்டாவது உலக இந்து மாநாடு-2003, மன்னார் மாவட்டம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xx, 108

Gebührenfrei & Ohne Registration

Content Ended up being man sagt, sie seien Zurück-Spielautomaten? – Mr BET 50 Spins frei JACKPOTGEWINNE 2024: 44.409.239,12 € Spielesammelungen & Kollektionen Weshalb Pinball-Dreams ?