ச.முருகானந்தன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2014. (சென்ன 600094: ஸ்கிரிப்ட் பிரின்டர்ஸ்).
viii, 136 பக்கம், விளக்கப்படங்கள், விலை: இந்திய ரூபா 280., அளவு: 19×13.5 சமீ., ISBN: 978-955-53041-6-0.
டாக்டர் ச.முருகானந்தனின் மற்றுமொரு சுகாதாரக் கைந்நூல். இன்றைய வாழ்க்கைச் சூழல், உணவுப் பழக்கம், தொழில் என்பன பிள்ளைப்பேற்றை பலருக்கும் இரண்டாம் பட்சமாக்கி வருகின்றன. அவ்வாறானவர்களின் மனநிலையினை அறிந்து, சிறந்த ஆலோசனை வழங்குவதாகவும், வழிகாட்டியாகவும் இந்நூல் அமைகின்றது. திருமண வாழ்வு, தாம்பத்திய உறவு, குழந்தைப்பேறு என்பவற்றில் தொடங்கி, பிரசவம், கர்ப்பிணிகளின் பாதுகாப்பு, நோய் நிலைமைகள் எனச் சகல நிலைகளையும் ஆராய்ந்து உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்குகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 59017).