கலை வட்டம் குழுவினர். யாழ்ப்பாணம்: நுண்கலைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).
12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×20 சமீ.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த ஓவியர் முத்தையா கனகசபை நம்மிடையே ஆசிரியராகவும் ஓவியராகவும் நன்கறியப்பட்டவர். கன்வஸ் தைல வர்ணத்தில் சிறப்பான ஓவியங்களை வரைந்துள்ளவர். இவரது ஓவியங்களின் கண்காட்சியொன்றினை யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் 2005, ஒக்டாபர் 15 முதல் 18 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் ஒழுங்குசெய்திருந்தார்கள். அந்நிகழ்வின் போது இச்சிறு கைந்நூல் வெளியிடப்பட்டது.