கா.சிவத்தம்பி (பதிப்பாசிரியர்). சென்னை 600098: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-B, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1996. (சென்னை 5: ராஜேஸ்வரி லித்தோ பிரஸ்).
x, vi, 85 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 18×12.5 சமீ., ISBN: 81-234-0539-1.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்து நுண்கலைத் துறையினரால் 1993-இல் நடத்தப்பெற்ற ‘நாடகத்தினதும் அரங்கினதும் கல்விசார் முக்கியத்துவம்’ பற்றிய கருத்தரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு. பண்பாடாக அரங்கு (கா.சிவத்தம்பி), இலக்கியமாக நாடகம் (சுரேஷ் கனகராஜா), முதல்நிலை பாடசாலைக் கலைத்திட்டத்தில் நாடகம் (காரை செ.சுந்தரம்பிள்ளை), சிறுவர்களுக்கான நாடகம் எழுதுதல் (குழந்தை ம.சண்முகலிங்கம்), சிறுவர்களுக்கான நாடகத் தயாரிப்பு (கோகிலா மகேந்திரன்), அரங்கத் தயாரிப்பின் அம்சங்களும் அவற்றின் கல்வியியல் முக்கியத்துவமும் (நா.சுந்தரலிங்கம்), நாடகப் பட்டறை ஒழுங்கு படுத்தும் முறைமை (குழந்தை ம.சண்முகலிங்கம்), மாற்றுக் கல்வியாக அரங்கு (க.சிதம்பரநாதன்), அரங்கில் மரபும் தொடர்ச்சியும் (சோ.பத்மநாதன்) ஆகிய ஒன்பது ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.