ஆரையம்பதி க. சபாரெத்தினம். ஆரையம்பதி-2: க. சபாரெத்தினம், 177 A, 6ஆம் குறுக்குத் தெரு, செல்வா நகர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2011. (மட்டக்களப்பு: வணசிங்க பிரின்டர்ஸ், 126/1, திருகோணமலை வீதி)
vii, 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-53426-1-2.
நல்வழி- சிறுவர் இலக்கியக் கவிதைத்தொகுப்பு. இதன் ஆசிரியர் கணபதிப்பிள்ளை சபாரெத்தினம் கிழக்கிலங்கையின் ஆரையம்பதியைச் சேர்ந்தவர். இதில் 35 தலைப்புகளில் சிறுவர் நல்வாழ்வுக்கேற்ற சுவையான கவிதைகளை உள்ளடக்கியுள்ளார். எட்டு வயது முதல் 16 வயது வரையிலான சிறார்களின் அறிவுவிருத்திக்கேற்ப நல்வழி புகட்டும் கருத்துக்களை இக்கவிதைகள் கொண்டுள்ளன. மனிதன் தீயவற்றிலிருந்து தனனைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும், உழைப்பிலும் வாழ்விலும் நேர்மையைக் கடைப்பிடிக்கவேண்டும், பெற்றோர்-பெரியோரின் வழிகாட்டுதல்களை ஏற்கவேண்டும் என்பன போன்ற கருத்துக்கள் இக்கவிதைகளில் பொதிந்துள்ளன.