கமலினி கதிர். திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2020. (சென்னை: சாய் தென்றல் பிரிண்டர்ஸ்).
80 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 21×14 சமீ., ISBN: 978-81-946682-4-4.
புகலிட நாடுகளில் தமிழ்க் குழந்தைகளுக்காக எழுதக்கூடியவர்கள் எம்மிடையே விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கும் புறச் சூழலில், கமலினி கதிரின் வருகை வரவேற்கத்தக்கது. குழந்தைகளுக்கு எழுதுவது என்பது குழந்தைகளின் மனநிலையைப் பெற்று, அதன் வழிநின்று சிந்தித்து, அவர்களுக்குப் புரியும் மொழியில் எளிய வார்த்தைகளும் இசை நயமும் கொண்டதாக இவரது பாடல்கள் அமைந்துள்ளன. வாழ்வியல், அழகியல், உறவுமுறை, இயற்கை, விலங்குகள் என்பன போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பாடல்கள் இவை.