15424 சிரிப்பு மூடை: சிறுவர் நாடகம்.

தேவநாயகம் தேவானந். சென்னை 86: எம்.வி.ஆடலரசு, Pencil Books, V2 Innovations, 280/1, ஒளவை சண்முகம் சாலை, கோபாலபுரம், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: செயல்திறன் அரங்க இயக்கம், 203/5, கச்சேரி நல்லூர் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, நவம்பர் 2019. (சென்னை 600012: திரிபுரம் பிரின்டர்ஸ்).

(4), 40 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100.00, அளவு: 20×14.5 சமீ.

ஓகஸ்ட் 2015இல் நடந்த நல்லூர் நாடகத் திருவிழாவில் முதல் மேடையேற்றம் கண்ட சிறுவர் நாடகம். அங்கதச் சுவையே நாடகத்தின் அடிநாதமான போதிலும், பெரியவர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுக்கும் சிறப்பான நாடகம். தரம் ஐந்து போட்டிப் பரீட்சைக்காக எல்லா நேரங்களிலும் படி படி என்று சிறுவர்களை இயந்திரத்தனமாக விரட்டியடிக்கும் பெற்றோர்களிடம் எதிரில் பல கேள்விகளை அநாயாசமாகத் தூக்கியெறிகிறது இந்நாடகம். பாடசாலைக்குப் போனால் படி படி வீட்டுக்கு வந்தால் படி படி  என்றால்  பிள்ளைகள் என்னதான் செய்வது? எப்போது தான் விளையாடுவது? வாத்தியார் அசந்த நேரத்தில்தான் அவர்கள் குறும்பு செய்கிறார்கள். வாத்தியார் திரும்பியதும் மீண்டும் படிப்பதாகப் பாவனை செய்கிறார்கள். படிப்பு பிள்ளைகளின் விருப்புக்குரியதாக அல்லாமல் விசனத்துக்குரியதாக மாறிவிட்டமை எவர் குற்றம்?அரிசி, மா, சீனி விலைகள் கூடியதை விட ஐஸ்கிரிம் விலையைக் கூட்டிவிட்டார்களே என்ற அவர்களின் கவலையை எவர் உணர்வார்கள்? பிள்ளைகளின் கனவுகள் எத்தகையன? அவர்களது கற்பனையுலகு எத்தகையது, என்று பல விடயங்களை அடுக்கிக்கொண்டு செல்கிறது நாடகம். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 76174).

ஏனைய பதிவுகள்