செபமாலை அன்புராசா. முருங்கன்: முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசெம்பர் 2019. (யாழ்ப்பாணம்: கத்தோலிக்க அச்சகம்).
(4), 16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 350., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-4609-07-5.
‘காகமும் நரியும்’ என்ற சிறுவர்க்கான பழைய கதையை புதிய நடையில் புதிய சிந்தனையுடன் ‘கொடுத்து மகிழ்வோம்’ என்ற தலைப்பில் சிறுவர் சித்திரக் கதையாக வழங்கியுள்ளார். இக்கதை பகிர்ந்து கொடுத்து மகிழவேண்டும். பெறுவதிலும் பார்க்க கொடுப்பதிலேயே இரட்டிப்பு இன்பம் பெறப்படுகின்றது என்ற கருத்தை மையப்படுத்தி இதனை ஆசிரியர் எழுதியுள்ளார்.