15440 சிங்கத்தை மயக்கிய சிறுவன்(சிறுவர் கதை).

ஜோர்ஜ் ஜெஸ்ரின். யாழ்ப்பாணம்: யாழ் களரி வெளியீட்டகம், 28/1, ஏ.வீ.விதி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).

16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250.00, அளவு: 29×20 சமீ., ISBN: 978-955-41123-0-8.

2009இல் வெற்றிலை நினைவுகள் என்னும் கவிதைத் தொகுதியை வழங்கிய இந்நூலாசிரியர் 2019இல் சித்திரக் கதைமூலம் மீண்டும் சிறுவர் இலக்கிய களத்தில் சந்தித்திருக்கிறார். யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த நூலாசிரியர் ஒரு நாடகக் கலைஞனாகவும், கவிஞனாகவும், ஊடகவியலாளனாகவும் பல்பரிமாணங்களில் தன்னை இனம்காட்டி வருபவர்.

ஏனைய பதிவுகள்