திமிலை மகாலிங்கம். மட்டக்களப்பு: International System for International Trainings (ISIT), 32/3, கோயில் வீதி, கல்லடி, உப்போடை, 1வது பதிப்பு, மார்கழி 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).
36 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×14 சமீ.
மட்டக்களப்பு, திமிலைத் தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட திமிலை மகாலிங்கம் தமிழ்மணி, கலாபூஷணம் விருதுகளைப் பெற்றவர். சிறுவர் இலக்கியம் தொடர்பான பல நூல்களை எழுதிய இவரின் மற்றுமொரு நூல் இதுவாகும். சிறுவருக்கு மகாபாரதம், துரியோதனன் சீற்றம், அரக்கு மாளிகை, பீமனின் சாதுரியம், துரோபதை சுயம்வரம், வெற்றிக் கனி, தருமர் முடிசூடுதல், அரச்சுனன் யாத்திரை, சுபத்திரை கலியாணம், ராஜசூய யாகம், பாண்டவர் திக்விஜயம், சூது விளையாட்டு, பாஞ்சாலி துகிலுரிதல், பஞ்சபாண்டவர் வனவாசம், பாசுபத அஸ்திரம், பொற்றாமரை, மாபெரும் பூதம், மறைந்து வாழும் காலம், குத்துச் சண்டை வீரன், கீசகன் கதை, தேசத்தை மீட்கும் முயற்சிகள், காலும் தலையும், கிருஷ்ணன் தூது, அடுத்தநாள் விடிந்தது, மகாபாரத யுத்தம், கீதோபதேசம் ஆகிய அத்தியாயங்களினூடாக எளிமையான முறையிலும் சிறுவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் கதை சொல்லப்பட்டுள்ளது. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4618).