15445 பாட்டிசொன்ன கதை: சிறுவர்சித்திரக் கதைகள்.

ஆனந்தராணி நாகேந்திரன். (புனைபெயர்: நெல்லை லதாங்கி). கரவெட்டி: ஆனந்தா நாடக மன்றம், மகாத்மாவீதி, நெல்லியடி, 1வது பதிப்பு, வைகாசி 2015. (யாழ்ப்பாணம்: சத்தியா பிரின்டர்ஸ்).

16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 180., அளவு: 27.5×20.5 சமீ., ISBN: 978-955-53908-1-1.

கோபு, சீதா, ப்ரவீன், கேசரி, தாரா ஆகிய ஐந்து சிறுவர்களுக்கு பாட்டி சொல்லும் கதை இது. காட்டில் உள்ள அழகான விலங்குகளிடையே காகம் தான் கறுப்பென்று ஒதுங்கி வாழ்வதும் அழகு மயிலாரின் பிறந்த நாள் விழாவில் பாட்டுப்பாடி காக்கையார் மீண்டும் அவமானப்படுவதும், குயில் அங்கு வந்து நிலைமையை உணர்ந்து, ‘நாங்கள் மாத்திரம் மகிழ்வாக இருக்கக்கூடாது நம்மைச் சார்ந்தவர்களும் மகிழ்வாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த உலகம் நம் எல்லோருக்குமானது’ என்ற  கருத்தை விதைக்கின்றது. காகத்தின் நல்ல பணிகளை எடுத்துக்கூறி காக்கையாரிடம் மனத்துணிவை ஏற்படுத்துகின்றது. வடமராட்சி வலயக்கல்வி அலுவலகத்தில் சங்கீத பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றுபவர் நெல்லை லதாங்கி. கலை இலக்கியத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவருபவர்.

ஏனைய பதிவுகள்

Svenska språke Nätcasinon 2024

Content Superb Casino Villig Nätet Äger: – lämplig länk Spelbolag Av Sverige Sam Andra Länder Sprida Dig Mer Försåvit På rak arm Casino I Sverige