15455 கூடல் (பரல் 1): கண்ணகி கலை இலக்கிய விழா மலர் 2012.

அன்புமணி  இரா.நாகலிங்கம் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: கண்ணகி கலை இலக்கியக் கூடல், 45யு, பிரதான வீதி, சின்ன ஊறணி, 1வது பதிப்பு, 2012. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).

64 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×22 சமீ.

2012 ஜீலை 28 முதல் 29 வரை கண்ணகி கலை இலக்கியக் கூடல் அமைப்பினரால் ஒழுங்குசெய்யப் பெற்ற கண்ணகி கலை இலக்கிய விழாவினையொட்டி வெளியிடப்பெற்ற 2012க்கான ஆண்டு மலர் இது. இம்மலரில் மட்டக்களப்பில் வரலாறு படைத்த கண்ணகி இலக்கிய விழா (தம்பு சிவா), வழக்குரைக்கும் கண்ணகி (கி.துரைராசசிங்கம்), கண்ணகி இலக்கியங்களில் கிழக்கின் பண்பாடு (வி.ரி.சகாதேவராஜா), கண்ணகி நம்பிக்கைகள்-ஏனைய பிரதேசங்களுடனான ஒரு பொது நோக்கு (வெல்லவூர்க் கோபால்), அந்நிய அறிஞர்களின் தேடலில் கண்ணகி (ந.தங்கேஸ்வரி), கிழக்கிலங்கை சமூகத்தில் சிலப்பதிகாரம் கூறும் வாழ்வியல் (எஸ்.மோசஸ்), கடல்கொண்ட காவிரிப் பூம்பட்டினம் (அனுசூயா சேனாதிராஜா) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14155 நவநாதம் 1998: நாவலப்பிட்டி-குயீன்ஸ்பரி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர்.

இரா.ராஜகோபால் (நிர்வாக ஆசிரியர்), க. பொன்னுத்துரை (மலராசிரியர்), கனகசபாபதி நாகேஸ்வரன் (பதிப்பாசிரியர்). நாவலப்பிட்டி: மலர் வெளியீட்டுக் குழு, ஸ்ரீ தேவசேனாபதி சுவாமி ஆலயம், குயின்ஸ்பரி, 1வது பதிப்பு, ஜனவரி 1998. (கொழும்பு 13: லட்சுமி