15462 ஜீவநதி: கார்த்திகை-மார்கழி 2009- கவிதைச் சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2009. (நெல்லியடி: சதாபொன்ஸ், மாலு சந்தி, அல்வாய்).

52 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 60.00, அளவு: 25×17.5 சமீ.

இக் கவிதைச் சிறப்பிதழில் ‘கவிதை மொழி’ உணர்வுத்தளமும் கருத்தியல் தளமும் (இ.இராஜேஸ்கண்ணன்), கவிதையின் மறுபக்கம் (சபா.ஜெயராசா), இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம்களின் கவிதை முயற்சிகள் -20ம் நூற்றாண்டு வரை (ஏ.இக்பால்), ஈழத்துப் பெண்கள் கவிதை வளர்ச்சியும் தளர்ச்சியும் வளமும் (செ.யோகராசா), நவீன கவிதைகளில் குறியீட்டுப் பிரயோகம் சில சிந்தனைத் தெறிப்புக்கள் (மு.அநாதரட்சகன்), புதுக்கவிதைக்கும் ஓசையுண்டு (சோ.பத்மநாதன்) ஆகிய கட்டுரைகளும், கவிஞர் உ.சேரனின் நேர்காணலும், வெலிகம ரிம்ஸா முகம்மத், மேமன்கவி, கெகிறாவ ஸஹானா, மன்னார் அமுதன், வெற்றிவேல் அமுதன், இ.சு.முரளிதரன், இராசேந்திரம் ஸ்ரலின், ந.சத்தியபாலன், நாச்சியாதீவு பர்வீன், வே.ஐ.வரதராஜன், சி.யோகேஸ்வரி, ஆரையூர்த் தாமரை, ஜின்னாஹ் ஷரிபுத்தீன், எல்.வஸீம்.அக்ரம், துவாரகன், மருதம் கேதீஸ், பி.கிருஷ்ணானந்தன், க.தர்மதேவன், ச.லலீசன், நிந்தாவூர் ஷிப்லி, மாதங்கி, தாட்சாயணி, கல்வயல் வே.குமாரசாமி, த.கலாமணி, சிவ.நிமலன், புலோலியூர் வேல்நந்தன், கெகிராவ ஸூலைஹா ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. கோகிலா மகேந்திரன் எழுதியுள்ள ‘கே.எஸ். சிவகுமாரனின் சொன்னாற்போல … 03 பற்றிய ஒரு பதிவு’ என்ற நூல்விமர்சனமும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் P 388).

மேலும் பார்க்க: ஞானம்: பரிசுச் சிறுகதைகள் 60 15711

ஏனைய பதிவுகள்