15463 அந்தப் பௌர்ணமியில்.

தர்காநகர் பாத்திமா றம்ஸியா. பேருவளை: பேசும் பேனா பேரணி, 26/6, பள்ளிவாசல் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (பேருவளை: பொசிட்டிவ் கிராப்பிக்ஸ், 63, பள்ளிவாசல் வீதி).

60 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 955-99327-0-4.

எழுத்துக்கள் வெறுமனே எழுத்துக்களாக இராது கருத்துள்ளதாகவும், உயிரோட்டமுள்ளதாகவும் இருக்கும்போது தான் அவ்வெழுத்துக்கள் தனிச் சிறப்பையும் மதிப்பையும் பெறுகின்றன என்று கூறும் இக்கவிதாயினி இவ்வாற்றலை ஊனமாகிப்போன தன் சமூகத்தின் உண்மைக் குரலாகவும் உயர்ச்சிக் குரலாகவும் ரணப்பட்ட இதயங்களுக்கு ஒத்தடமாகவும் அமையவேண்டும் என்ற நோக்கில் பன்னிரண்டு கவிதைகளை அன்னைக்காக, நல்ல ஓவியம், கவிதைப் பயணம், முடிச்சுக்கள், அந்தப் பௌர்ணமியில், ஒரு கல்லாகிவிட, சமாதான சமிக்ஞைகள், நாளைகளின் நம்பிக்கை, நேசிப்புகள் நேர்மையானால், எனக்கான உயிர், நல்ல வரம், வலிமை கொடு ஆகிய தலைப்புகளில் இந்நூலில் தந்துள்ளார். பாத்திமா றம்ஸியா  களுத்துறை மாவட்டத்தில் தர்க்கா நகரைச் சேர்ந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63441).

ஏனைய பதிவுகள்

Leukste slots kosteloos online performen

Zodra uw spelaccount ben aangemaakt, heef gij toegang zelfs eentje ruime afwisseling in geavanceerde casinospellen LEGZO, akelig noppes gokmachine Snoepmonster. Gelijk nemen acteurs meestal deel