15480 இரவின் எதிரிப் பூக்கள்.

வட அல்வை இராஜகிருபன். (இயற்பெயர்: தங்கவடிவேல் கிருபாகரன்), சி.ரஜேந்தனா (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xii, 40 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-5249-63-8.

அமரர் தங்கவடிவேல் கிருபாகரன் வடமராட்சி, அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 2002இல் விஞ்ஞானமானிப் பட்டதாரியான இவர் திருக்கோணமலையில் இரசாயனவியல் ஆசிரியராகப் பணியாற்றியவர். 2020இல் சுகவீனம் காரணமாக மறைந்த இவரது கவிதைகளைத் தொகுத்து அவரது மறைவின் 31ஆம் நாள் கிரியைகளின் போது நூலுருவில் அவரது நினைவாக 166ஆவது ஜீவநதி வெளியீடாக வெளியிட்டுள்ளனர். தனது அனுபவங்களை தான் கண்ட சமூக முரண்பாடுகளை, அவலங்களை, போலியான மானுடர்களின் பொய்மை முகங்களை, இன்றும் மறையாதிருக்கும் யுத்தத்தின் சாட்சிகளை, காதலை, கனவுகளை, ஏக்கங்களை தனது கவிதைகளில் எளிமையாகவும் வலிமையாகவும் இராஜகிருபன் சொல்லியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

Online Casino Bonuses

Content How We Test 200percent Online Casino Bonuses | gratorama casino no deposit code 15 No Deposit Bonus At Liberty Slots How To Maximize Your

13115 விநாயகர் வழிபாடு.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஓகஸ்ட்; 2017. (யாழ்ப்பாணம்: றூபன் பிறின்ரேர்ஸ், ஆனைக்கோட்டை). 96 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 17.5×12 சமீ.