பாலமுனை முபீத். பாலமுனை: அப்துல் முபீத், 183, உதுமா வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2019. (அக்கரைப்பற்று -02: சிற்றி பொயின்ற், 78/1, உடையார் வீதி).
xxviii, 99 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×15.5 சமீ., ISBN: 978-955-44353-4-6.
அம்பாறை மாவட்டத்தின், பாலமுனை என்றஊரில் பிறந்த பாலமுனை முபீத் தன் அரம்பக் கல்வியை பாலமுனை ஹிதாயா மகா வித்தியாலயத்திலும் அட்டாளைச்செனை தேசிய பாடசாலையிலும் கற்றவர். உயர் கல்வியை பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலயத்தில் கற்றார். 67 கவிதைகளைக் கொண்ட ‘இருண்ட தேசத்துக் காவியம்’ இவரது ஐந்தாவது நூலாகும். கொலுசு சத்தம், உரத்துப் பேசும் தென்றல், மரணத்தைக் கீறும் பேனா என்பன இவரது கவிதைத் தொகுப்புக்கள். உடைந்த கால்கள் இவரது நவீன குறுங்காவியம். ‘இத்தொகுதி சாம்பல் நிலத்திலே தென்பட்ட பூமியின் நிறத்தை முழுமையாக இருண்ட தேசமாக மாற்றி திணித்துக் கொண்டிருக்கும் சமூகத் துரோகமான அரசியலையும், அகமனதின் உள்ளங்கையில் புரளி செய்து கொண்டிருக்கும் தாய்மை, பெண்மை, மனிதம், காதல் என்கின்ற வகிபாகங்களின் மறுபுற இருளாக்கமாகவும் கவிஞர் வெளிப்படுத்த எத்தனித்திருப்பதன் அர்த்தம் புரிகின்றது. சிறுபான்மையாக இலங்கை நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் மீதான பார்வை, குறிப்பாக தென் கிழக்கை மையப்படுத்தி இருப்பதால் தென் கிழக்கு எப்படியான அரசியலால் சூழ்ந்திருக்கிறது, அரசியல் இருப்பிடம் பற்றியதான யோசனை போன்ற கேள்விகளையும் பதில்களையும் உணர்த்தும் கவிதைகள் முபீத்தினுடையவை.’ (எம்.ஏ.அன்சில்-அணிந்துரையில்)