முல்லை அமுதன். திண்டுக்கல்: ஓவியா பதிப்பகம், 17-13-11, ஸ்ரீராம் கொம்பிளெக்ஸ், காந்தி நகர் மெயின் ரோடு, வத்தலகுண்டு, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (சென்னை 116: ஏ.கே.எல். பிரின்டர்ஸ்).
64 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-943467-2-2.
அனுபவ வலிமிக்க முல்லை அமுதனின் வரிகளில், ஈழத்தில் திட்டமிட்டு நடந்த தமிழின அழிப்பின் துயரங்கள் கண்ணீரும் விம்மலும் இரத்தமுமாக வெளிப்படுகின்றன. இப்படி ஈழ அகதிகளின் வாழ்வும் மனமும் தேட்டமுடையதாகவும் தோற்றப்பிழையாகவும் இருவேறு விதமாக விரிசல்கொண்டு நிற்பதை முல்லை அமுதனின் கவிதைகளில் காணமுடிகிறது. உடைத்துப் பேசப்படவேண்டிய இந்த விடயத்தை உரிய நேரத்தில் கவனப்படுத்தியிருப்பது முக்கியமானது. (முன்னுரையில், கவிஞர் பழநிபாரதி).