சி.ஏ.இராமஸ்வாமி (மூலம்), அகளங்கன் (பதிப்பாசிரியர்). வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், ‘தமிழ் அதர்”, இல. 90, திருநாவற்குளம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி).
304 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 500., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-7654-12-6.
சிவநெறிப் புரவலர், சமூக சஞ்சீவி, தமிழியல் வித்தகர் எனப் பல பட்டங்களைப் பெற்ற ஈசன் ஐயா எனப்படும் சி.ஏ.இராமஸ்வாமி அவர்களின் கவிதைகளின் தொகுப்பு இது. அவரது பவளவிழா முடிவில் 76ஆவது அகவையில் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினரால் வெளியிடப்பெற்றுள்ளது. ஈசன் ஐயா அவர்களின் வாழ்வும் பணிகளும் விரிவாக அகளங்கன், கந்தையா ஸ்ரீகணேசன், ஓ.கே.குணநாதன், பிரம்மஸ்ரீ இ.பாலச்சந்திரக் குருக்கள், ஆகியோரால் மலரும் நினைவகளாகப் பகிரப்பட்டுள்ளன. அவரை வாழ்த்தி எழுதிய புகழாரங்கள் தொடர்ந்து பதிவுக்குள்ளாகியுள்ளன. இவற்றையடுத்து கவிஞரின் தேர்ந்த கவிதைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.