15491 ஈழத்துப் பூராடனாரின் நூற்திரட்டு 1: பிரபந்த இலக்கியவியல்.

க.தா.செல்வராசகோபால் (மூலம்), அன்புமணி இரா. நாகலிங்கம் (தொகுப்பாசிரியர்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ரிப்ளக்ஸ் அச்சகம், 1108 வே வீதி, ரொரன்டோ M5S 2W9, 1வது பதிப்பு, மார்கழி 1988. (கனடா: ஜீவா பதிப்பகம்;, ரொரன்டோ).

xvi, 672 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×14.5 சமீ. 

இந்நூற்றிரட்டில் ஈழத்துப் பூராடனார் எழுதிய புலவர்மணிக் கோவை (425 செய்யுள்கள்), விபுலானந்தர் பிள்ளைத்தமிழ் (101 செய்யுள்கள்), ஈழத்து இரட்டையர் இரட்டைமணி மாலை (22 செய்யுள்கள்), இரட்சகர் இயேசு மும்மணிக் கோவை (37 செய்யுள்கள்), முதுமைப் பெயர்ச்சி நான்மணி மாலை (40 செய்யுள்கள்), புயற்பரணி (624 செய்யுள்கள்), பெத்தலேகம் கலம்பகம் (543 செய்யுள்கள்) ஆகிய ஏழு பிரபந்தங்களும் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12711).

ஏனைய பதிவுகள்