15494 உரத்துப் பேசும் தென்றல்.

பாலமுனை முபீத் (S.H.A.முபீத்). பாலமுனை: கலாசார அபிவிருத்தி மையம், 1வது பதிப்பு, நவம்பர் 2014. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட்).

(16), 17-118 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×16 சமீ., ISBN: 978-955-44353-1-5.

பாலமுனை முபீத்தின் இரண்டாவது கவிதைத் தொகுதி இதுவாகும். முதல்தொகுதி ‘கொலுசுச் சத்தம்’ என்றபெயரில் வெளிவந்திருந்தது. உரத்துப்பேசும் காற்று புயல். உரத்துப் பேசாத காற்று தென்றல். உரத்துப் பேசுவதென்பது வன்மை. உரத்துப் பேசாதது மென்மை. இக்கவிதைகளோ உரத்துப் பேசும் மென்மைகளாக மணம் பரப்பிநிற்கின்றன. இருப்பினும் சில இடங்களில் புல்லாங்குழல் ஓசை புயலாகி நிற்கின்றது. தென்றல் போல இதமானவன் இக்கவிஞன். இக்கவிஞனின் வலுவான வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளுரை உவமானமாக உறவாடுவதைத்தான் ‘உரத்துப் பேசும் தென்றல்’ என்று உருவகப்படுத்தியிருக்கக்கூடும்.

ஏனைய பதிவுகள்

17454 வள்ளியும் ஜாஸ்மினும்.

ஆர்த்திகா குமரேஷ், மந்தாகினி குமரேஷ். சென்னை 600093: வேரல் புக்ஸ் வெளியீடு, 6, 2ஆவது தளம், காவேரி தெரு, சாலிகிராமம், முதற் பதிப்பு, பெப்ரவரி 2024. (சென்னை 600093: வேரல் புக்ஸ்). 40 பக்கம்,

16397 கனகரவியின் சிறார் பாடல்கள்.

கனகரவி (இயற்பெயர்: கனகரட்ணம் ரவீந்திரன்). சுவிட்சர்லாந்து: ரவீந்திரன் சுபத்திரை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (வவுனியா: லேற்றஸ் பிறின்டர்ஸ், வைரவபுளியங்குளம்). 16 பக்கம், வண்ணச் சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ. ஈழத்தில்