கமலினி கதிர். சுவிட்சர்லாந்து: கமலினி கதிர், Neunbrunnen str-6, 8050 Zurich, 1வது பதிப்பு, 2018. (மன்னார்: சைபர் சிற்றி அச்சுக் கலையகம்).
142 பக்கம், புகைப்படத் தகடு, சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
தன் மண்ணையும் அதன் மக்களையும் நேசித்துக் கவிதை படைத்து வருபவர் கமலினி கதிர். மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 2002இல் புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்துக்குச் சென்றவர். அங்கு பல ஆண்டுகளாகத் தமிழாசிரியராகப் பணியாற்றிவருகிறார். ஒரு வீணை அழுகிறதே என்ற சிறுகதைத் தொகுதியைத் தொடர்ந்து 2018இல் இக்கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. ஈழத்துப் பறவைகளே, ஒரு முதிய தாய் ஏங்குகிறாள், ஒரு நிமிடம், எந்தன் குரல் கேட்கிறதா?, மனிதநேயம் மரணித்த பூமி என இன்னோரன்ன தலைப்புகளில் 115 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.