மூதூர் முறாசில். மூதூர்: பீஸ் ஹோம் பப்ளிகேஷன்ஸ், பஸார் பள்ளி வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2014. (மூதூர்: எஸ்.எஸ். பிரிண்டர்ஸ்).
ix, 127 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-44666-1-6.
‘பெரிதும் சிறிதுமாக 40 கவிதைகளைத் தொகுத்து ‘எரி கிடங்கைப் பயந்துகொள்’ என்னும் இந்த நூலின் ஊடாக நோக்கம் மறந்த மனிதனை நோக்கி ஞாபகமூட்டலைச் செய்வதோடு, இன்றியமையாத ஈமானியப் பண்புகளையும் சமூகத்திற்கு அவசியமான விடயங்களையும் கவிதைகளுக்கூடாக இதயங்களுக்குக் கடத்துகின்றார். இஸ்லாத்தின் எதிரிகளையும் அவர்களின் விரோதச் செயல்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து சத்தியத்தின் குரலாகவும் இவரது கவிதைகள் ஒலிக்கின்றன. கவிஞர் முறாசிலின் ‘அவ்ரத்’, ‘நடன விருந்து’ முதலான கவிதைகள் மூலமாக தனது நிஜவாழ்க்கையில் தீமையைத் தடுப்பதிலும் இஸ்லாத்தை நேருக்கு நேர் எடுத்துக் கூறுவதிலும் அவருக்கிருந்த அக்கறையையும் துணிவையும் விளங்கிக்கொள்ள முடிகின்றது.” (என்.எம்.அமீன், அணிந்துரையில்).