15506 என்னடா மோனை என்னத்தை எழுதிறாய்.

கந்தையா பத்மானந்தன் (புனைபெயர்: காரைக்கவி). யாழ்ப்பாணம்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, காரைநகர், 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், Creaze Didital, 14, அத்தபத்து டெறஸ்).

x, 108 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-5222-04-9.

காரைநகர் மண்ணின் கல்வித்துறை ஆளுமையாக மிளிரும் காரைக்கவி கந்தையா பத்மானந்தன் விஞ்ஞானத்துறையில் பட்டம் பெற்றவர். இலக்கியத்துறையில் உள்ள ஈடுபாட்டினால் தொடர்ச்சியாக  எழுதிவருபவர். தமிழர் வாழ்வியலில் உள்ள விஞ்ஞானபூர்வமான அறிவியல் இருப்புக்களை வெளிக்கொணரும் வகையில் உண்மைகளைத் தேடி எழுதும் ஆர்வத்தின் வெளிப்பாடாக பல நூல்களுக்கு சொந்தக்காரனாக வாழ்பவர். மே தின வாழ்த்துக்கள், மனமடக்கும் மார்க்கம், ஆசிரியன், அவசரக் காமம், காசுக்கு எல்லாம் வருமா, இறவா பிறவா இறைவா, மழையே நீ வாழி என இன்னோரன்ன 78 கவிதைகளை இத்தொகுப்பில் காணமுடிகின்றது.

ஏனைய பதிவுகள்