அ.கௌரிதாசன். கிண்ணியா-3: பேனா பப்ளிக்கேஷன்ஸ், 92/4, உமர் ரலி வீதி, மஹ்ரூப் நகர், 1வது பதிப்பு, 2014. (கிண்ணியா: அம்ரா கிராப்பிக்ஸ்).
88 பக்கம், விலை: ரூபா 300.00, அளவு: 22.5×16 சமீ., ISBN: 978-955-42023-0-6.
கவிஞர் அம்பலவாணர் கௌரிதாசன் ஆலங்கேணி கிழக்கைச் சேர்ந்தவர். இந்நூல் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான 2015ஆம் ஆண்டுக்கான கொடகே தேசிய சாகித்திய விருதைப் பெற்றுக்கொண்டது. இத்தொகுப்பில் கவிஞரின் தேர்ந்த படைப்பாக்கங்களான கவிஞன், கவிஞன் தீண்டும் காரிகை, படைத்தவன் அருள வேண்டும், புனிதனாவாய், நிமலன் வழங்கிய தண்டனை, அம்மா, ஒரு கவிதை எழுதிவிட, பாரை ஆளும் பதவி வேண்டாம், சாட்சிக்கு எவருமில்லை, கனவு, மறுபிறப்பில் என்னை மகனாகப் பெற்றுவிடு, வரலாறாவாய், நீதிபதி நீதான், உலகம் வாழ்த்தும், யாரிடம் முறையிடலாம், என்ன வழி, கரும்பு தின்னக் கைக்கூலி, வரவு செலவு மறந்த வாழ்வு, கடலோடு சங்கமித்த கதை எங்கும் ஒலிக்கிறது, இல்லறத்தின் ஜோதி, புகழ் தேடப் பா பாடு, இல்லாள், கழுத்தறுப்பு அவலம் கண்டேன், அத்தனையும் மாயம், மானிட நேயம் மதிக்கும் மனிதன், இவையனைத்தும் இருக்கிறதா?, விதி சிரிக்கிறது, வீட்டோர நாவல் மரம், வாராதோ ஒரு பொழுது, மகிழ்விலாட மணம் செய்தேன், தூய செயல்கள் வெல்லும், உலகத்தை நீ உருட்டு, கச்சான் படுத்தும் பாடு, வளம் பெருக்க வழி, பெருமானின் ஆணைகள், ஊன்றுகோல் தேவை, நாகரிகத்தின் அடையாளச் சின்னங்கள், பாராட்டுக்குரியவர்கள், மகளிருக்கு அடிபணியும் இயற்கை, சிந்தித்து வாக்களிப்பீர், என் பாட்டு, பாராளுமன்றத்துப் படியேறும் ஆசை ஆகியவை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.