ஏ.எம்.முபாஸித் அல்பத்தாஹ். ஒலுவில் 3: ஏ.எம்.முபாஸித் அல்பத்தாஹ், 83, பழைய தபாலக வீதி, ஹிஜ்ரா ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (ஒலுவில் : மில்லனியம் பிரின்டர்ஸ்).
(4), 96 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-38120-0-1.
ஒலுவிலைச் சேர்ந்த ஏ.எம்.முபாஸித் அல்பத்தாஹ்வின் கவிதைகளின் பாடுபொருள்களாக சமூகப் பிரக்ஞை, இயற்கையின் ஊடே ஒன்று கலந்திருத்தல், தாய்மை மீதான மதிப்புணர்வு, மாணவப் பருவத்தின் மன உணர்வுகள், அநீதிக்கு எதிரான குரல், ஆழ்ந்த இஸ்லாமிய வேட்கை எனப் பலதரப்பட்ட விடயங்களைக் காணமுடிகின்றது. அவரது கவிதைகளைப் பார்க்கையில் கவிதை எனும் விரிகடலில் நம்பிக்கையோடு பயணிக்கும் ஒரு படகோட்டியின் நிழலுருவம் மனக்கண்ணில் விரிகின்றது. நிறைவைத் தேடும் ஒரு நெடும் பயணம் இது.