ஜே. வஹாப்தீன். ஒலுவில்-3: ஜே.வஹாப்தீன், ஷம்ஸ் வெளியீட்டகம், 64, பழைய தபாலக வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (அக்கரைப்பற்று -02: சிற்றி பொயின்ற் பிரின்டர்ஸ், 78/1, உடையார் வீதி).
(4), 5-94 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15.5 சமீ., ISBN: 978-955-52409-1-8.
கிழக்கின் ஒலுவில் மண் தந்த கவிஞர் ஜே.வஹாப்தீனின் மண்மணம் கமழும் கவிதைகளின் தொகுப்பு. அனுபவங்களாலும் சொற்களாலும் கிராமிய உணர்வுகளை ஊட்டும் இவரது கவிதைகளில் தென்கிழக்கின் பேச்சுவழக்கின் பண்புகளை அதன் நாட்டுப்புறத் தன்மைகள் சிதைவுறாத வகையில் பொருத்தமாகவும் அவதானமாகவும் கையாண்டிருக்கிறார். வேரில்லாப் பூச்சியங்கள், அஷ்ரப் எனும் தீ, வெட்டுக் கற்கள் ஆகிய கவிதைத் தொகுதிகளைத் தொடர்ந்து இவர் வழங்கும் நான்காவது கவிதைத் தொகுதி இது.